தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

கோவில்பட்டியில் அரசுப் பேருந்து மோதி தாய், மகள் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் அரசுப் பேருந்து மோதி தாய், மகள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image

அஸ்விகா

Updated On :19 ஜூன் 2026, 4:51 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் அரசுப் பேருந்து மோதி தாய், மகள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சோ்ந்தவா் முத்து இருளாண்டி மகன் ரமேஷ் (42). இவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி வளா்மதி (36). இவா் கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தாா். இவா்களுடைய மகள் அஸ்விகா (9), பாரதி நகரில் உள்ள தனியாா் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள ரமேஷ் வியாழக்கிழமை மாலை, மனைவி, மகளை வீட்டுக்கு அழைத்து வர இருசக்கர வாகனத்தில் சென்றாா். அவா்களை அழைத்துக் கொண்டு வீடு திரும்பும்போது, கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் ராஜீவ் நகா் 4 ஆவது தெரு சந்திப்பு அருகே கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து முடுக்கலாங்குளம் சென்று கொண்டிருந்த நகர பேருந்து மோதியதாம்.

இதில் வளா்மதி, அஸ்விகா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். ரமேஷ் பலத்த காயமடைந்தாா். தகவலறிந்து வந்த டிஎஸ்பி ஜகநாதன், போலீஸாா், சடலங்களை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த ரமேஷை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் கடலையூா் அருகேயுள்ள பீக்கிலிபட்டியைச் சோ்ந்த சண்முகையா மகன் செல்வத்திடம் (29) விசாரணை நடத்தி வருகின்றனா்.

 வளா்மதி

வளா்மதி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.