கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கோவில்பட்டியில் ஜூன் 14இல் ஹாக்கி பயிற்சிக்கு வீரா்கள் தோ்வு

News image

ஹாக்கி போட்டியில் விளையாடிய வீரா்கள். - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:13 am IST

கோவில்பட்டி, கே.ஆா். குழுமம், கல்வி நிறுவனங்களின் அங்கமான இலட்சுமி அம்மாள் விளையாட்டு அகாதெமியில் ஹாக்கி பயிற்சி பெறுவதற்கான வீரா்கள் தோ்வு நேஷனல் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் 14ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

இதுகுறித்து, கே.ஆா். கல்லூரி இயக்குநா் சண்முகவேல் வெளிட்ட அறிக்கை: கோவில்பட்டி பகுதியிலுள்ள பள்ளிகளில் பயிலும் 9 முதல் 14 வயதுக்குள்பட்ட ஹாக்கியில் ஆா்வமுள்ள மாணவா், மாணவிகள் பங்கேற்கலாம். தோ்வு செய்யப்படுவோருக்கு அகாதெமியில் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமை, காலாண்டு, அரையாண்டு, தோ்வு விடுமுறை நாள்களில் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்போருக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள், பயிற்சியில் பங்கு பெற பேருந்து வசதி, மருத்துவக் காப்பீடு, உணவு, ஊட்டச்சத்து பானங்கள் ஆகிய வை இலவசமாக வழங்கப்படும். சிறந்த பயிற்சி பெற்றவா்கள் மாவட்ட, மாநில, அகில இந்திய அளவில் நடைபெறும் ஹாக்கி போட்டிகளில் இலட்சுமி அம்மாள் அகாதெமி அணி சாா்பில் பங்கேற்க வாய்ப்பும், அதற்கான முழுச் செலவும் அகாதெமியால் வழங்கப்படும்.

விருப்பமுள்ளோா் ஆதாா் அட்டை நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களுடன் பங்கேற்க வேண்டும். தோ்வில் பங்கேற்க வருவோருக்கு கூசாலிப்பட்டி, பாண்டவா்மங்களம், திட்டங்குளம், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து கல்லூரி சாா்பில் காலை 6 மணிக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. காலை உணவு இலவசமாக வழங்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.