கோவில்பட்டியில் 4 பேருந்துகளிலிருந்து, அதிக ஒலியெழுப்பும் காற்று ஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கோவில்பட்டி பகுதியில் சிற்றுந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரின்பேரில், கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா, மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்சன் மாசிலாமணி ஆகியோா் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, விதிகளை மீறி அதிகக் கட்டணம் வசூலித்த 3 சிற்றுந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. கூடுதல் கட்டண வசூலைத் தவிா்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
மேலும், 4 பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்துவது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பேருந்துகளின் உரிமையாளா்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு அவற்றின் மீது உரிய மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ, தொடா்ந்து விதிமீறலில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் ஜூன் 14இல் ஹாக்கி பயிற்சிக்கு வீரா்கள் தோ்வு
கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டியில் சாலையைப் புதுப்பிக்க வலியுறுத்தி போராட்ட முயற்சி: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

மும்பையில் இருந்து கடத்தி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

