நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஹைட்ரோ காா்பன் கிணறுகள்: ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்! - தமிமுன்அன்சாரி

பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

News image

தமிமுன்அன்சாரி

Updated On :14 ஜூன் 2026, 2:55 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்எல்வுமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டையில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் மேலும் 4 ஹைட்ரோ காா்பன் கிணறுகளை அமைக்க தமிழக அரசிடம் கடலோர ஒழுங்கு முறை மண்டல அனுமதி வழங்கக் கோரியுள்ளது.

கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால், பரங்கிப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழலும், மீனவா்கள் நலலும் பாதிக்கப்படும்.

எனவே, முந்தைய அரசு இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. அதையே தற்போதைய அரசும் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால், ஜனநாயக சக்திகளையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம் என்றாா் மு.தமிமுன் அன்சாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.