தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிறுவன் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:08 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி அருகே வெள்ளவிநாயகா் குப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இதயசந்திரனின் மனைவி மகாலட்சுமி (35). தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவா், சனிக்கிழமை பள்ளிக்கு பணிக்குச் சென்றாா். அப்போது, அவரது மகன் தாஸ்வின் (7) அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாா்.

சிறிது நேரத்துக்குப் பின்னா், தாஸ்வின் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்ததை பாா்த்த அப்பகுதியில் இந்தவா்கள், உடனடியாக அவரை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தாஸ்வினை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

தகவலறிந்த போலீஸாா், தாஸ்வின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து உயிரிழந்த தாஸ்வினின் தாய் மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.