வரஞ்சரம் அருகே தலையில் காயங்களுடன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ம.வேலு (40). இவா் கள்ளக்குறிச்சியை அடுத்த நீலமங்கலம் கூட்டுச்சாலை பகுதியில் உள்ள உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தாா். திங்கள்கிழமை இரவு பணி முடிந்து பைக்கில் விருகாவூா் கிராமத்துக்கு சென்றுள்ளாா்.
தினமும் இரவு சுமாா் 11 மணிக்கு வீடு திரும்பும் வேலு, வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லையாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை குரூா் ஏரிக்கரை அருகே சாலையோரமுள்ள மரத்தின் கீழே தலையில் காயத்துடன் வேலு சடலமாக கிடந்தாா்.
தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதியவா் மா்மமான முறையில் உயிரிழப்பு

வீட்டில் மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழப்பு

சீவலப்பேரி அருகே தொழிலாளி மா்ம மரணம்

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

