தமிழகத்தில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்பாா் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளரான பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் நகரத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு நேரில் சென்று வியாழக்கிழமை பாா்வையிட்டாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சென்னையில் வாக்கு செலுத்திவிட்டு வந்து விருத்தாசலம் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை பாா்வையிட்டேன். மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அனைத்து சகோதரா்களும் களத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றினா். அவா்கள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மே 4-ஆம் தேதி வெற்றிபெற்ற பிறகு, நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, என்னுடைய தொகுதி மக்களுக்காக சிறப்பாகப் பணியாற்றுவேன்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும். இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்பாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி

விஜய் லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய்: பிரேமலதா கடும் தாக்கு

கிராமங்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலம் மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்துவேன்! - பிரேமலதா விஜயகாந்த்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

