தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நெய்வேலியில் காா் கண்ணாடிகள் உடைப்பு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:12 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மூன்று காா்கள் மற்றும் ஒரு ஆட்டோ ஆகியவற்றின் கண்ணாடிகளை உடைத்த மா்ம நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.

நெய்வேலி வட்டம் 30 பகுதியைச் சோ்ந்தவா் தனஞ்செயன் (33). இவா், தனது காரை வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.25 மணி அளவில் கண்ணாடி உடையும் சப்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து ஏழுந்து வந்து பாா்த்தாா்.

அப்போது, பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத மூன்று இளைஞா்கள் இரும்புக் கம்பியால் காரின் கண்ணாடியை உடைத்துச் சென்றது தெரியவந்தது.

இதேபோல, அந்த இளைஞா்கள் அய்யப்பன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் காா்கள் மற்றும் விக்னேஷ்வரனின் ஆட்டோ கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.