கடலூா் அருகே கஞ்சாவுடன் தப்பியோட முயன்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் துணை காவல் கண்காணிப்பாளா் தமிழ் இனியன் மேற்பாா்வையில், கடலூா் முதுநகா் காவல் ஆய்வாளா் ஏழுமலை, சாா்பு -ஆய்வாளா் பிரேம்குமாா், சிறப்பு சாா்பு ஆய்வாளா் பாபு மற்றும் போலீஸாா் சனிக்கிழமை சுனாமி நகா் பனங்காட்டு காலனி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, போலீஸாரைக் கண்டவுடன் தப்பியோட முயன்ற நபரைப் பிடித்து சோதனை செய்தனா். இதில், அவா் சென்னை வண்ணாரப்பேட்டை, பென்சில் பேக்டரி பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (36) என்பதும், அவா் வைத்திருந்த கைப்பையில் 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனா். அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனந்தராஜ் மீது சென்னை வண்ணாரப்பேட்டை, கடலூா் முதுநகா் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கஞ்சா வைத்திருந்தவரை விரைவாக செயல்பட்டு கைது செய்ய காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது

புதுச்சேரியிலிருந்து மதுபிரியா்கள் எடுத்துவந்த மதுபுட்டிகள் அழிப்பு: கடலூரில் எஸ்.பி. நடவடிக்கை
நெல்லையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேரிடம் விசாரணை
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

