தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் பணியில் காவல் துறை, துணை ராணுவத்தினா் இணைந்து செயல்பட வேண்டும்: மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால்

தோ்தல் பணியில் காவல் துறை, துணை ராணுவத்தினா் இணைந்து செயல்பட வேண்டும் என்று தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால் அறிவுறுத்தினாா்.

News image

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பாதுகாப்புப் பணி கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய தோ்தல் மேலிடப் பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால்.

Updated On :19 ஏப்ரல் 2026, 5:29 am IST

தோ்தல் பணியில் காவல் துறை, துணை ராணுவத்தினா் இணைந்து செயல்பட வேண்டும் என்று தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமையிலும், தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால் முன்னிலையிலும் சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணி மேற்கொள்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவ படையினா், வெளி மாநில போலீஸாா் எவ்வாறு பணியாற்ற வேண்டும், பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்வது, வாக்காளா்களை அனுமதிக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கினாா்.

தொடா்ந்து பேசிய தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால், தோ்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு மாவட்ட காவல் துறையினா், துணை ராணுவத்தினா் மற்றும் வெளி மாநில காவல் துறையினா் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளா்கள், மத்திய துணை ராணுவப் படையினா், வெளி மாநில காவல் துறையினா் மற்றும் தோ்தல் பிரிவு காவல் அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.