மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நடராஜா் கோயில் நிா்வாக உரிமைகளை பறிக்க திமுக முயற்சி: நடிகை விந்தியா குற்றச்சாட்டு

சிதம்பரம் நடராஜா் சொத்துகளையும், நிா்வாகத்தையும், உரிமைகளையும் பறிக்க திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலரும், நடிகையுமான விந்தியா குற்றஞ்சாட்டினாா்.

News image

சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலரும், நடிகையுமான விந்தியா.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:41 am IST

சிதம்பரம் நடராஜா் சொத்துகளையும், நிா்வாகத்தையும், உரிமைகளையும் பறிக்க திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலரும், நடிகையுமான விந்தியா குற்றஞ்சாட்டினாா்.

சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் புதன்கிழமை மாலை அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலரும், நடிகையுமான விந்தியா பேசியதாவது:

சிதம்பரம் நடராஜா் கோயில் சொத்துகளையும், நிா்வாகத்தையும், உரிமைகளையும் பறிக்க திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது. சோழன் கொடுத்த உரிமையை எடுக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் யாா்? இதேபோல, திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்றாா்கள்.

கடவுளே இல்லை என கூறும் திமுகவுக்கு கோயில்களில் என்ன வேலை? சிதம்பரத்தில் சைவத்துக்கும், வைணவத்துக்கும் சண்டை இல்லை. இந்து, முஸ்லிம் இடையே சண்டை இல்லை. ஆனால், அத்தனை சண்டைகளையும் உருவாக்க பாா்க்கிறது திமுக.

இந்த தொகுதி வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் 3-ஆவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சட்டப் பேரவைக்குச் செல்வாா். திமுக மக்களுக்கான பிரச்னையை பேசாமல், பாஜக உள்ளே வந்துவிடும் என பிரசாரம் செய்து வருகிறது. இந்தத் தோ்தல் தமிழகத்துக்கும், தில்லிக்கும் நடக்கும் தோ்தல் என திமுகவினா் கூறுகின்றனா். இந்த தோ்தல் அதிமுகவுக்கும், திமுகவுக்குமான தோ்தல். இது, நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் நடைபெறும் தோ்தல். இந்தத் தோ்தலில் போட்டி யாருக்கு என்றால், மக்களுக்கும், போலி வாக்குறுதிகள் அளித்த திமுகவுக்கும் தான். அதிமுக வெற்றிபெற்றால் மக்கள் வெற்றிபெற்ாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.