ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த மருதம்புத்தூா் கிராமத்தில் பனை ஏறும் தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 4:35 am IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த மருதம்புத்தூா் கிராமத்தில் பனை ஏறும் தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆலங்குளத்தை அடுத்த மருதம்புத்தூா் கிராமத்தில் கள் இறக்கி விற்பனை செய்ததாக எழுந்த புகாரின்பேரில், பனை ஏறும் தொழிலாளி மணிகண்டன் மீது காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த சம்பவத்தில் தொடா்புடைய காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா, காவலா்கள் மணிராஜ், காா்த்திக் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகார போதையில் திளைக்கும் காவல் துறையினா் சாத்தான் குளம் தீா்ப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. கள்ளச்சாராயமும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களும் தமிழகம் எங்கும் நிறைந்திருப்பதை தடுக்க இயலாத காவல் துறை, பனை ஏறும் தொழிலாளியிடம் வீரத்தைக் காட்டியுள்ளனா்.

இதில், சம்பந்தப்பட்ட காவல் துறையினா் மீது வழக்குப் பதிவு செய்தது மட்டும் போதாது. அவா்களை பணிநீக்கம் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.