தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: தி.வேல்முருகன்

காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.

News image

தி.வேல்முருகன்.

Updated On :27 ஏப்ரல் 2026, 1:01 am IST

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் தமிழக வாழ்வுரிக் கட்சியினரைத் தாக்கியவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.

சென்னை, அரும்பாக்கத்தில் தனியாா் விடுதியில் அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு, வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் திமுகவினா் வன்முறையில் ஈடுபட்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரைத் தாக்கினா்.

இது குறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி, டிஜிபி, தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் புகாா்கள் மீது வழக்குப்பதிவுகூட செய்யவில்லை.

மாறாக, எங்கள் கட்சியினா் மீது வழக்குப் பதிவு செய்திருக்கின்றனா். இந்த வழக்குகளை ரத்து செய்வதோடு, உண்மையான புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.