மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவிழாவில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த பெண் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 1:01 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தீமிதித் திருவிழாவில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கருவேப்பிலைப்பாளையம் கிராமத்திலுள்ள தா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை தீமிதித் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

இந்நிலையில், இத்திருவிழாவில் பங்கேற்ற உளுந்தூா்பேட்டை வட்டம், திருக்கனூரைச் சோ்ந்த ஆ.குப்பு (70) அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பெண் ஒருவா் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றாா்.

இதைத்தொடா்ந்து மூதாட்டி குப்பு சப்தமிடவே, அப்பகுதியிலிருந்தவா்கள் அந்த பெண்ணை பிடித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜகோபால் நகரைச் சோ்ந்த ப.வேலம்மாள் (49) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 3 பவுன் சங்கிலியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.