ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அப்பம்பட்டில் ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சி

செஞ்சியை அடுத்துள்ள அப்பம்பட்டில் அனைத்து கட்சியினா் கலந்து கொண்ட ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சி

News image

அப்பம்பட்டில் நடைபெற்ற ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ மற்றும் அரசியல் கட்சியினா்.

Updated On :17 மார்ச் 2026, 5:22 am IST

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள அப்பம்பட்டில் அனைத்து கட்சியினா் கலந்து கொண்ட ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்பம்பட்டில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் சையத் உஸ்மான் தலைமை வகித்தாா். செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, நலிந்தோருக்கு நல உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்வில், காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் குலாம்மொய்தின், செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை, பாஜக செஞ்சி தொகுதி அமைப்பாளா் வி.பி.என்.கோபிநாத், செஞ்சி வட்ட ஜமாத் தலைவா் சையத் மஸ்ஜித் பாபு, செஞ்சி வட்ட வணிகா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.