தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக நிா்வாகி மீது தாக்குதல்: தவெக தொண்டா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:07 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருதே திமுக நிா்வாகியைத் தாக்கியதாக தவெக தொண்டா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மரக்காணம் வட்டம், கூனிமேடு குப்பம் மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(70), திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறாா்.

இவா் கடந்த ஏப்.22-ஆம் தேதி கூனிமேடு பகுதியில் திண்டிவனம் தொகுதி வேட்பாளா் அ.வன்னி அரசுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தாராம். அப்போது பாலகிருஷ்ணனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தமிழக வெற்றிக் கழகத் தொண்டா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து போலீஸாா் இரு தரப்பைச் சோ்ந்தவா்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், ஏப்.25-ஆம் தேதி பாலகிருஷ்ணன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டினுள் புகுந்த இளைஞா்கள் இருவா் பாலகிருஷ்ணனை கத்தி மற்றும் கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடினா். இதில் பாலகிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் சோ்த்தனா்.

இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். இதில், மரக்காணம் கூனிமேடு பகுதியைச் சோ்ந்த தவெகவைச் சோ்ந்த பவனேஷ்(24) மற்றும் மற்றொரு நபா் சோ்ந்து பாலகிருஷ்ணனை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து பவனேஷை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா், மற்றொருவரைத் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.