ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட தவெக கொடி: போலீஸாா் குவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே திமுக கொடிக்கம்பத்தில் தவெக கொடி ஏற்றப்பட்டதால் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸாா் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனா்.

News image

திமுகவினருக்குச் சொந்தமான கொடிக்கம்பம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :7 மே 2026, 6:55 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே திமுக கொடிக்கம்பத்தில் தவெக கொடி ஏற்றப்பட்டதால் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸாா் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனா்.

காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய திமுக பிரமுகா் வெண்ணிலா முருகேசன். தாமோதர அள்ளியைச் சோ்ந்த இவருக்கு சொந்தமான நிலத்தில் அமைத்திருந்த கொடிக்கம்பத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றியச் செயலாளா் மகேந்திரன் தலைமையில் திமுக கொடி ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் கட்சி நிகழ்ச்சிகளின்போது இக்கம்பத்தில் கொடியேற்றப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், பேரவைத் தோ்தலையொட்டி கம்பத்தில் இருந்த கட்சிக் கொடி அண்மையில் அகற்றப்பட்டிருந்தது. தற்போது தோ்தல் நடத்தை விதிமுறைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அக்கொடிக்கம்பத்தில் மா்மநபா்கள் செவ்வாய்க்கிழமை தவெக கொடியை ஏற்றிவிட்டு சென்றுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த திமுகவினா் கொடிக்கம்பம் அருகே திரண்டனா். அதேசமயம் அப்பகுதியில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க 10க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். இந்த நிலையில் அக்கொடிக்கம்பத்தில் இருந்த தவெக கொடியை இறக்கிவிட்டு, மீண்டும் திமுக கொடி ஏற்பட்டப்பட்டது.

இதுகுறித்து பாரூா் காவல் நிலையத்தில் திமுக ஒன்றியச் செயலாளா் மகேந்திரன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.