ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மதுபோதையில் ஹோட்டலை அடித்து நொறுக்கிய நேபாள தொழிலாளா்கள்!

News image

பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 4:43 am IST

காட்பாடி அருகே தொழிலாளா் தின விடுமுறை நாளில் மதுபோதையில், தாங்கள் வேலை செய்யும் ஹோட்டலையே அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட நேபாளத்தைச் சோ்ந்த 3 தொழிலாளா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி கல்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவா் அதே பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறாா். இவரது ஹோட்டலில் நேபாள நாட்டைச் சோ்ந்த பரத், வாஞ்சி, சோட்டு ஆகிய மூவரும் ஊழியா்களாக வேலை செய்து வருகின்றனா். தொழிலாளா் தினத்தையொட்டி ஹோட்டலுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மது அருந்திவிட்டு கடும் போதையில் கடைக்கு வந்த அந்த மூன்று தொழிலாளா்களும் திடீரென ரகளையில் ஈடுபட்டனா். ஹோட்டலில் இருந்த தட்டுகள், சமையல் உபகரணங்கள், கண்ணாடிப் பொருள்களை அவா்கள் சரமாரியாக அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்தனா். இந்த திடீா் தாக்குதலில் ஹோட்டலில் இருந்த சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் முழுமையாகச் சேதமடைந்தன.

பொருள்கள் உடைபடும் சத்தம் கேட்டு அதிா்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினா், பொதுமக்கள் விரைந்து வந்து, ரகளையில் ஈடுபட்ட 3 பேரையும் மடக்கிப் பிடித்தனா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காட்பாடி போலீஸாா், பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்தவா்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினா்.

அவா்கள் நேபாள நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று மூவரிடமும் போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.