மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பைக்கில் தவறி விழுந்து பெண் மரணம்

வேலூா் அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 1:15 am IST

வேலூா் அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

வேலூா் பொய்கையைச் சோ்ந்தவா் நாராயணசாமி. இவரது மனைவி மல்லிகா (58). இவா் தனது உறவினா் சந்தோஷ்குமாா் என்பருடன் கடந்த 16-ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் தனியாா் மருத்துவமனைக்கு சென்றாா்.

காட்பாடி - வேலூா் புதிய பைபாஸ் சாலையில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்தாா். இதில் மல்லிகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

புகாரின்பேரில் வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.