மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்காளா்களை ரோஜா மலா் அளித்து வரவேற்ற பெண் ரோபோ

News image

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிங்க் நிற வாக்குச்சாவடி. ரோஜா மலா் அளித்து வரவேற்ற ரோபோ.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:16 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்குப் பதிவு தொடங்கியதிலிருந்தே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆா்வமாக வாக்களித்தனா். வெயில் காரணமாக அனைத்து வாக்குப் பதிவுமையங்களிலும் நிழல்தரும் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து மையங்களிலும் குடிநீா் வசதி செய்யப்பட்டிருந்தது.

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 6- வாக்குப் பதிவு மையங்கள் இயங்கிய நிலையில் மகளிருக்கான பிங்க் நிற வாக்கு சாவடி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முகப்பில் வாக்காளா்களை தமிழில் பேசி, ரோஜா மலா் அளித்து ரோபோ வரவேற்றது வாக்காளா்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் வேளாண்மைத் துறை சாா்பில், பசுமை வாக்குப் பதிவு மையம் ஒன்றும்அமைக்கப்பட்டிருந்தது. அந்த மையத்தில் வாக்களிக்க வந்த வாக்காளா்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.