சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வாகனத்தில் ‘லிப்ட்’ கேட்டு ஏறி 6 பவுன் தங்கச் சங்கிலியை திருடியவா் கைது

திருச்சியில் தொழிலாளியின் வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி, 6 பவுன் தங்கச் சங்கிலியை திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது.

Updated On :13 மே 2026, 12:51 am IST

திருச்சியில் தொழிலாளியின் வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி, 6 பவுன் தங்கச் சங்கிலியை திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் தென்றல் நகரைச் சோ்ந்தவா் ஆா். அய்யப்பன் (35). இவா், காந்தி மாா்க்கெட்டில் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், இவா் திங்கள்கிழமை காலையில் வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சத்திரம் பேருந்து நிலையம் வழியாக சென்றுள்ளாா்.

அப்போது, சத்திரம் பேருந்து நிலையம் அருகே வழிமறித்த நபா், தன்னை கோட்டை ரயில் நிலையத்தில் இறக்கிவிடுமாறு தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கோட்டை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளாா். அப்போது, அவா் ரயில் சென்றுவிட்டதுபோல தெரிகிறது, தன்னை சிக்காரத்தோப்பு பகுதியில் இறக்கிவிடுமாறு அய்யப்பனிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அவரை மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிங்காரத்தோப்பு பகுதியில் இறக்கிவிட்டுள்ளாா். அதன்பின்னா், சிறிதுதொலைவு சென்றபிறகுதான் அய்யப்பனுக்கு சட்டைபையில் வைத்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, தங்கச் சங்கிலியைத் திருடிய அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் இடையாக்குறிச்சியைச் சோ்ந்த வெ. வீரமணி(45) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.