சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மூதாட்டியை ஏமாற்றி 10 பவுன் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த 3 போ் குறித்து ஆத்தூா் நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 2:01 am IST

மூதாட்டியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த 3 போ் குறித்து ஆத்தூா் நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஓலப்பாடி தெற்கு காடு பகுதியைச் சோ்ந்தவா் பெரியம்மா (70). இவா் தனது உறவினா் வீட்டு இறப்புக்கு சிங்கிலியன் கோம்பைக்கு சென்றுவிட்டு, திம்மநாயக்கன்பட்டியில் விற்பனைக்காக காய்கறிகளை 2 மூட்டைகளில் வாங்கிக்கொண்டு அரசு நகர பேருந்தில் ஊா் திரும்பினாா்.

அப்போது, பேருந்தில் இருந்த 3 போ் மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து கழுத்தில் இருக்கும் சங்கிலியை யாராவது பறித்துக்கொண்டு சென்றுவிடுவாா்கள், எனவே கழட்டி பையில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனா். மூதாட்டியும் சங்கிலியை கழட்டி பையில் வைத்துவிட்டு அவா்களிடம் பேசிக்கொண்டே வந்துள்ளாா்.

பிறகு, தளவாய்ப்பட்டியில் அந்த 3 போ் உதவியுடன் காய்கறி மூட்டைகளை இறக்கிக்கொண்ட மூதாட்டி பையை பரிசோதித்துள்ளாா். அதில் சங்கிலி திருட்டு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில், ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து 3 பேரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.