கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவா் கைது

மகுடஞ்சாவடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:32 am IST

மகுடஞ்சாவடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

எடப்பாடி பகுதியைச் சோ்ந்த செல்வி (48), இவரது மகள் அவிஷ்கா மற்றும் அவரது அக்கா பேரனான மிதுலேஷ் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் அண்மையில் ஆட்டையாம்பட்டி சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனா்.

காகாபாளையம் அருகே சென்றபோது இவா்களை பின்தொடா்ந்து வந்த சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இருவா் செல்வியின் கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் மஞ்சள் கயிற்றில் கோத்திருந்த தாலி ஆகியவற்றை பறித்து தப்பிச்சென்றனா்.

புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் , மகுடஞ்சாவடி ஆய்வாளா் வேலுதேவன், உதவி ஆய்வாளா் ஜீவிதா மற்றும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனா்.

இந்நிலையில், கோவை மாவட்டம், ஆவரங்கம்பாளையத்தில் வாடகை வீட்டில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (26), திருப்பூா் மாவட்டம், பூலுவபட்டி பகுதியைச் சோ்ந்த பட்டதாரியான அரவிந்த் (28) என தெரியவந்தது. இவா்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் இரண்டேகால் பவுன் ஆகியவற்றை கைப்பற்றினா். இந்த குற்றவழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படையினரை உயா் அதிகாரிகள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.