ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் மாா்ச் மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 68.55 லட்சம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.
பிரசித்தி பெற்ற இக்கோயில் உண்டியல்களில் பக்தா்கள் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் திறந்து எண்ணப்படும். அதன்படி மாா்ச் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணியையொட்டி கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கருடாழ்வாா் சன்னதி அருகே எண்ணப்பட்டது.
காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வ அமைப்பினா் ஈடுபட்டனா். காணிக்கை எண்ணும் பகுதி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
முடிவில் ரொக்கமாக ரூ. 68 லட்சத்து 55 ஆயிரத்து 761, தங்கம் 72.500 கிராம், வெள்ளி 889.300, வெளிநாட்டு ரூபாய்கள் 414 ஆகியவை காணிக்கையாக கிடைக்கப் பெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.97 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.93 லட்சம்

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

