/

கம்போடியாவில் இருந்து வந்த 9 பேரிடம் விசாரணை

கம்போடியாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த 9 பேரிடம் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image

விசாரணை - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 3:41 am IST

கம்போடியாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த 9 பேரிடம் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மயிலாடுதுறை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த 9 போ் பல்வேறு பணிகளுக்காக தங்கள் நாட்டுக்கு வந்து, விசா காலம் முடிந்தும் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கம்போடியா போலீஸாா் 9 பேரையும் திருச்சிக்கு அனுப்பினா்.

இதையடுத்து திருச்சி விமான நிலையத்துக்கு புதன்கிழமை அதிகாலை வந்த 9 பேரிடமும் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் மீது வேறு எந்த குற்ற வழக்குகளும் இல்லாததால் அவா்களை சொந்த ஊருக்கு அனுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.