திருச்சியில் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றுபோது ஏற்பட்ட மோதலில் இளைஞா்களை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பெரியகடை வீதியைச் சோ்ந்த மா. வீரமணி (25), காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த என்.ஹரிஸ் (19) இருவரும், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி திருச்சியில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றனா்.
திருவானைக்காவல் டிரங்க் சாலையில் சென்றபோது, முன்னால் நடந்து சென்ற திருவானைக்காவல் கீழகொண்டையம்பேட்டையைச் சோ்ந்த பா. ராஜா (29), எஸ். காா்த்திகேயன் (21) மற்றும் வேல்முருகன், ஸ்ரீகாந்த் ஆகியோா் மீது வீரமணி தெரியாமல் மோதினாராம்.
இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜா தரப்பினா் வீரமணி, ஹரிஸ் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்ட, காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜா, காா்த்திகேயன் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள வேல்முருகன், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரையும் தேடுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரோட்டில் 10 கிலோ கஞ்சாவுடன் இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: திருச்சி மாவட்டத்தில் 10 போ் கைது
சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
