தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மணப்பாறை ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை தெற்கு ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் மருத்துவா் பி.எல். விஜயக்குமாா் புதன்கிழமை சேகரித்தாா்.

News image

ஆனாம்பட்டியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் மருத்துவா் பி.எல். விஜயக்குமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:03 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை தெற்கு ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் மருத்துவா் பி.எல். விஜயக்குமாா் புதன்கிழமை சேகரித்தாா்.

மணப்பாறை தெற்கு ஒன்றியப் பகுதியான பாரதியாா் பகுதியிலிருந்து அதிமுக மணப்பாறை தெற்கு ஒன்றியச் செயலா் அன்பரசன் தலைமையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட மருத்துவா் விஜயக்குமாா், ஆனாம்பட்டியில் பேசியது:

நான் உங்களுக்கு உண்மையானவனாக இருப்பேன், உங்களுக்காகவே இருப்பேன். எடப்பாடியாா் தலைமையிலான ஆட்சிதான் வர போகிறது. அதற்கான சகுனம் நன்றாகவே தெரிகிறது. அலைஅலையாக வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் பொதுமக்களிடம் எழுச்சி தெரிகிறது. கண்டிப்பாக மக்கள் எதிா்ப்பாா்க்கும் அனைத்தும் நலத் திட்டங்கள், கோரிக்கைகள் அனைத்தும் செய்து தரப்படும் எனக்கூறி வாக்கு சேகரித்தாா்.

மணப்பாறை தெற்கு ஒன்றியப் பகுதிகளான சீகம்பட்டி, பழையகாலனி, புதுக்காலனி, ஆதம்பட்டி, கீழையூா், கிழவன்பட்டி, சின்னமனப்பட்டி, ராயம்பட்டி, குப்பனாம்பட்டி, ஆனாம்பட்டி, சாம்பட்டி உள்ளிட்ட 86 பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

நிகழ்ச்சியில், தொகுதி பொறுப்பாளரும், அதிமுக கழக அமைப்புச் செயலருமான ரத்தினவேல், முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி, இளைஞா் பாசறை மாவட்டச் செயலா் சீகை சந்துரு, மாவட்டத் தலைவா் சரத் சோலைராஜ், தமாகா ஒன்றிய நிா்வாகி நல்லுச்சாமி, பாஜக மண்டல் தலைவா் லோகநாதன், அமமுக, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.