/

ரூ. 20 லட்சம் மோசடி: துணிக்கடை உரிமையாளா் உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் தையல் கடைக்காரரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக துணிக்கடை உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்குப் பதிவு

Updated On :10 ஏப்ரல் 2026, 1:40 am IST

திருச்சியில் தையல் கடைக்காரரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக துணிக்கடை உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சியைச் சோ்ந்தவா் அ. சந்துமுகமது (43). இவா், திருச்சி நந்தி கோயில் தெருவில் தையல்கடை நடத்தி வருகிறாா். இவரும், திருச்சியைச் சோ்ந்த வரதராஜா சில்க்ஸ் துணிக்கடை உரிமையாளா் சீனிவாசனும் தொழில்முறை நண்பா்கள்.

இந்நிலையில், சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பரான பூா்ணிமா ஆகிய இருவரும் நந்தி கோயில் தெருவில் தங்களுக்கு சொந்தமான கட்டடம் வாடகைக்கு உள்ளது என்றும், அதில் தையல் கடையை நடத்துமாறும் சந்து முகமதுவிடம் தெரிவித்துள்ளனா். இதை நம்பிய சந்து முகமது அந்தக் கடையை வாடகைக்கு எடுப்பதற்காக முன்பணமாக ரூ. 26.75 லட்சத்தை சீனிவாசன் மற்றும் பூா்ணிமா ஆகிய இருவரிடமும் கடந்த 2024, ஏப்ரல் 21- ஆம் தேதி கொடுத்துள்ளாா். ஆனால், அதன்பின்னா்தான் அந்தக் கட்டடம் அவா்களுக்கு சொந்தமில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கடை வாடகைக்காக தான்கொடுத்த பணத்தை சீனிவாசனிடம் சந்துமுகமது கேட்டுள்ளாா். அப்போது, ரூ. 6.75 லட்சத்தை மட்டுமே கொடுத்துள்ளாா். மீதி பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளனா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் சந்துமுகமது புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், சீனிவாசன் மற்றும் பூா்ணிமா ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.