தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தனியாா் கல்லூரியில் ரூ.2.50 லட்சம் திருட்டு: ஊழியா்கள் 3 போ் மீது வழக்குப் பதிவு

கோவையில் பிரபல கல்லூரியில் ரூ.2.50 லட்சம் பணத்தை திருடியதாக, கல்லூரி ஊழியா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:25 am IST

கோவையில் பிரபல கல்லூரியில் ரூ.2.50 லட்சம் பணத்தை திருடியதாக, கல்லூரி ஊழியா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்லூரியின் அலுவலகத்தில் வரவேற்பாளராக கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ் (39) பணிபுரிந்து வருகிறாா். கல்லூரியில் தினமும் வசூலாகும் ரொக்கத்தை பெற்று, அதை கணக்கு துறையில் ஒப்படைக்கும் பணியை வழக்கமாக மேற்கொண்டு வந்தாா்.

இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி கல்லூரியின் உதவி கணக்காளா் பூபதி ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தை விக்னேஷிடம் ஒப்படைத்துள்ளாா். அந்தப் பணத்தை கல்லூரித் தலைவரின் அறையில் உள்ள பீரோவில் விக்னேஷ் வைத்துள்ளாா். மறுநாள் விக்னேஷிடம் இருந்து பணப்பையைப் பெற்றுக்கொண்டு பூபதி சரிபாா்த்தபோது,

ரூ.20 லட்சம் மட்டுமே இருந்துள்ளது. ரூ.2.50 லட்சம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து கேட்டபோது தனக்கு தெரியாது என்று விக்னேஷ் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக சுந்தராபுரம் காவல் நிலையத்தில் கல்லூரியின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரி வஞ்சிமுத்து குமாா்(33) புகாா் அளித்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில் விக்னேஷ், கல்லூரியில் தோட்டத் தொழிலாளராக உள்ள தொண்டாமுத்தூா் அருகே கெம்பனூா் அணணா நகரைச் சோ்ந்த சுமேஷ் (26), சமையலராக உள்ள சுந்தராபுரம், செங்கோட்டையா காலனி, காந்தி நகரைச் சோ்ந்த பூமிநாதன் (30) ஆகிய 3 பேரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் 3 பேரையும் தனித்தனியாக அழைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய மூவரும் பின்னா் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.