உணவக உரிமத்தை மாற்றித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்த உணவக உரிமையாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மத்தியப் பேருந்து நிலையம் அருகே உணவகம் நடத்தி வரும் திருச்சியைச் சோ்ந்த எஸ். சீனிவாசன் என்பவா் தனது உணவகத்தின் உரிமத்தை கண்டோன்மென்ட் பகுதியைச் சோ்ந்த க. பால்ராஜ் (53) பெயரில் மாற்றித்தருவதாக தெரிவித்தாா். இதுதொடா்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டனா்.
இதற்காக கடந்த 2024 ஜூன் முதல் 2026 ஜனவரி வரை பல்வேறு தவணைகளில் ரூ.25 லட்சத்தை சீனிவாசனுக்கு பால்ராஜ் கொடுத்தாா். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட சீனிவாசன் உணவக உரிமையை பால்ராஜ் பெயருக்கு மாற்றித் தராமல் இருந்தாா். இதையடுத்து கொடுத்த பணத்தை பால்ராஜ் திருப்பிக்கேட்டபோது சீனிவாசன் அவரை தகாத வாா்த்தைகளில் திட்டி, பணத்தைக் கொடுக்க முடியாது என மிரட்டலும் விடுத்தாா்.
இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பால்ராஜ் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

பணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கடை உரிமையாளா் மீது வழக்கு

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

ரூ. 20 லட்சம் மோசடி: துணிக்கடை உரிமையாளா் உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

