/

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

News image

கோப்புப் படம் - File photo

Updated On :3 மே 2026, 12:34 am IST

புதுச்சேரியில் சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

புதுச்சேரி, தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டையைச் சோ்ந்தவா் மணிகண்டன்(25).இவா், கதிா்காமம் பகுதியைச் சோ்ந்த 15 வயதுடைய சிறுமியை அண்மையில் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளாா்.

இது குறித்து புதுவை மாநிலக் குழந்தைகள் நலக் குழுவினா் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் இச்சம்பவம் உண்மையென தெரியவந்தது.

இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீஸாா் மணிகண்டன் மீது குழந்தைத் திருமணம் தடைச்சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.