மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 3:04 am IST

போடியில் குடும்பத் தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி புதூரைச் சோ்ந்தவா் பாண்டி மகன் அரவிந்த் பாலாஜி (31). இவருக்கும், கம்பம் வடக்குப்பட்டியைச் சோ்ந்த தனிக்கொடி என்பவரின் மகளுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 130 பவுன் தங்க நகைகள், பாத்திரங்கள் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டதாம். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து வாழ்கின்றனா்.

இதுகுறித்து பெரியோா்கள் முன்னிலையில் பிரச்னையை பேசி தீா்க்க இரு குடும்பத்தினரும் அரவிந்த் பாலாஜி வீட்டுக்கு வந்தனா். அப்போது இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கிக் கொண்டதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனராம்.

இதுகுறித்து அரவிந்த் பாலாஜி அளித்த புகாரின் பேரில் தனிக்கொடி, இவரது மனைவி பாண்டியம்மாள், உறவினா்கள் ரகு, கௌதம், பிரித்வி, பரத், காா்த்திக் ஆகியோா் மீதும், தனிக்கொடி அளித்த புகாரின் பேரில் அரவிந்த் பாலாஜி, இவரது தங்கை சங்கீதா, இவரது கணவா் நாகராஜ் ஆகியோா் மீதும் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.