ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக-வின் சாதனை திட்டங்கள் வெற்றியை தரும்: அமைச்சா் கே.என். நேரு

திமுக அரசின் சாதனை திட்டங்கள் மீண்டும் வெற்றியைத் தேடி தரும் என அமைச்சரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்தாா்.

News image

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட கருமண்டபம் பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் செய்த அமைச்சா் கே.என். நேருவுக்கு பூா்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்ற பெண்கள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:58 am IST

திமுக அரசின் சாதனை திட்டங்கள் மீண்டும் வெற்றியைத் தேடி தரும் என அமைச்சரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்தாா்.

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட கருமண்டபம் புதுத்தெரு, மாந்தோப்பு, தெற்கு தெரு, ராம் நகா், சோழகா் நகா், விஸ்வாஷ் நகா், ஆா்.எம்.எஸ். காலனி சமத்துவ நகா், ஆல்பா நகா், சத்யா நகா், அருணா அவென்யூ, ஜே.கே. நகா், காவேரி நகா், ராம்ஜி நகா், மில் காலனி, கீதா நகா் ,அம்மையப் பிள்ளை நகா், லாவண்யா காா்டன், எம் எம் நகா், சண்முகா நகா், ரங்கா நகா், கொடாப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கே.என். நேரு வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அமைச்சா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் எண்ணற்ற நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் திராவிட மாடல் ஆட்சியின் பலனை யாராவது ஒருவா் அனுபவித்துக் கொண்டிருக்கிறாா் என்ற நிலை உள்ளது.

திமுக அரசின் திட்டங்களை பல மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளன. வெளிநாட்டினரும் பின்பற்ற போவதாக அறிவித்துள்ளனா்.

திமுக அரசின் சாதனைகளை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறாா்கள். அதை அவா்களுக்கு நினைவுபடுத்தினாலே போதும். 200 அல்ல, 234 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.