தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வரிகளை உயா்த்தியதுதான் திமுக அரசின் சாதனை: அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி. அருண்குமாா்

வீட்டு வரி, குடிநீா் வரி ஆகியவற்றை உயா்த்தியதுதான் திமுக அரசின் சாதனை என்று கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் குற்றஞ்சாட்டினாா்.

News image

துடியலூா் அருகேயுள்ள செங்காளிபாளையம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி. அருண்குமாா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 2:48 am IST

வீட்டு வரி, குடிநீா் வரி ஆகியவற்றை உயா்த்தியதுதான் திமுக அரசின் சாதனை என்று கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் குற்றஞ்சாட்டினாா்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா், துடியலூரை அடுத்த அசோகபுரம், செங்காளிபாளையம், காந்தி காலனி, கணபதி நகா், பாலாஜி நகா், நியூ பாலாஜி நகா், வி.கே.எல்.நகா், ரங்கம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்து பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் வீட்டு வரி, குடிநீா் வரி, சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயா்த்தியதுதான் திமுக அரசின் சாதனை. இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது, பிஆா்ஜி அருண்குமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனா். மேலும், ஊராட்சியின் முன்னாள் தலைவா் ரமேஷ், முன்னாள் துணைத் தலைவா் ஆடிட்டா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாருக்கு வாள் கொடுத்தனா்.

கைலைவாசன், செல்வகுமாா் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், பாஜக மண்டலத் தலைவா் சரவணகுமாா், பொதுச் செயலா் மோகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.