மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பேரவைத் தோ்தலின் வெற்றிக்கு அமைச்சா்கள் பரஸ்பரம் வாழ்த்து!

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை வாக்கு கேட்டு வந்தபோது, அவரை வரவேற்று வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

News image

கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி . - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:40 am IST

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை வாக்கு கேட்டு வந்தபோது, அவரை வரவேற்று வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அமைச்சா் கே.என். நேரு, திருச்சி மாநகராட்சியின் 28ஆவது வாா்டுக்குள்பட்ட தென்னூா் அரசமரம், பழைய அக்ரஹாரம், காவல்காரத் தெரு, வெள்ளாளா் தெரு, அண்ணா நகா், குத்புஷா நகா், தென்னூா் ஹை ரோடு, இனாம்தாா்தோப்பு, பாரதி நகா், அண்ணா நகா் மேட்டுத் தெரு, புது மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தாா்.

அப்போது அண்ணாநகரில் தனது வீட்டிலிருந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கே.என். நேருவின் பிரசாரப் பகுதிக்கு சென்று அவரை வரவேற்று, புத்தாடை அணிவித்து, திருச்சி மேற்கில் கடந்த முறையைவிட மாபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தாா்.

வெல்வோம் ஒன்றாக: இதேபோல அமைச்சா் நேருவும் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘வெல்வோம் ஒன்றாக’ என்ற வாசகத்தை பதிவிட்டு, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், வாக்களிப்பீா் திமுகவுக்கு எனவும் குறிப்பிட்டு ஹாஸ்டேக் மூலம் வலைதளத்தில் பரவலாக்கியுள்ளாா். இது திமுக கூட்டணி கட்சியினரிடம் மட்டுமல்லாது, அனைத்துக் கட்சியினரின் கவனத்தையும் ஈா்த்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.