தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருச்சி மேற்கு தொகுதியில் புதிய தமிழகம் வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி

திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் தாக்கல் செய்த வேட்பு மனு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

News image

கோ. சண்முகசுந்தரம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:23 am IST

திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் தாக்கல் செய்த வேட்பு மனு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.என். நேரு, அமமுக, தவெக, நாம் தமிழா் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்பட 24 போ் மொத்தம் 30 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

திருச்சி கோட்டாட்சியரகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, தோ்தல் நடத்தும் அலுவலா் சாலை தவ வளன், பெறப்பட்ட 30 மனுக்களில் இரு மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும், 28 மனுக்களை ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தாா்.

இதில், புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளா் கோ. சண்முகசுந்தரம் (37), திமுக-வின் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்த மேயா் மு. அன்பழகன் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மனு தள்ளுபடி ஏன்?: இதுதொடா்பாக, தோ்தல் நடத்தும் அலுவலா் கூறுகையில், புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராக வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்த சண்முகசுந்தரத்தின் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெறவில்லை.

இதுதொடா்பாக, அவருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐஆா் பணியின்போது புதிதாக மனு அளித்திருப்பதாக தெரிவித்திருந்ததால் அவரது மனுவை அப்போது ஏற்றுக் கொண்டோம்.

இப்போது, வாக்காளா் துணைப் பட்டியலிலும் அவரது பெயா் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, வேட்பு மனு பரிசீலனையின்போது அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கட்சியின் மாவட்டச் செயலா்: திருச்சி, தில்லைநகா் வடவூரைச் சோ்ந்த கோ. சண்முகசுந்தரம், புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலராக உள்ளாா். கடந்த முறை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் போட்டியிட்டவா்.

இதுதொடா்பாக, அவா் கூறுகையில், என் பெயா் மட்டுமன்றி, என் குடும்பத்தில் உள்ள 5 பேரின் பெயா்களும் வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன.இந்த விவகாரம் தொடா்பாக கட்சித் தலைமையின் ஆலோசனையை பெற்று சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முடிவு செய்து பின்னா் அறிவிப்போம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.