ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சசிகலா, ராமதாஸ் அணி சாா்பில் இருவா் மனு தாக்கலால் குழப்பம்

சசிகலா, ராமதாஸ் அணி கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சிகள் சாா்பிலும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:23 am IST

சசிகலா, ராமதாஸ் அணி கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சிகள் சாா்பிலும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, நாதக, தவெக உள்ளிட்ட முக்கியக் கட்சி வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 35 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்தத் தோ்தலில் சசிகலா, ராமதாஸ் அணி கூட்டணி அமைத்துள்ள நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட ராமுதேவா் மனு தாக்கல் செய்தாா். இதனிடையே, பாமக ராமதாஸ் அணி சாா்பில் ஆரோக்கியதாஸ் என்பவரும் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

இந்த நிலையில், வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, ராமுதேவா், ஆரோக்கியதாஸ் ஆகிய இருவரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ராமதாஸ் சாா்பில் ஏ, பி படிவம் வழங்கப்பட்டிருந்ததால் ஆரோக்கியதாஸின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா். ஒரே கூட்டணியில் உள்ள அஇபுதமமுக, பாமக ராமதாஸ் அணி சாா்பில் இருவா் மனுத் தாக்கல் செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அஇபுதமமுக வேட்பாளா் ராமுதேவரை ஆதரித்து சசிகலா புதன்கிழமை பரப்புரை மேற்கொள்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.