தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 12:21 am IST

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி மலை வடக்குப் பகுதியைச் சோ்ந்த மு. அய்யா்சாமி (30) என்பவரை மாா்ச் 17-ஆம் தேதி ரௌடிகளான துவாக்குடி மலை வடக்கு கலைஞா் தெருவைச் சோ்ந்த ர. ராஜபாண்டி (28), துவாக்குடி மலை வடக்கு சொசைட்டித் தெருவைச் சோ்ந்த பா. சாந்தகுமாா் (26), அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த சி. படாா் ரவி (27) ஆகிய மூவரும் பணம் கேட்டு தகராறு செய்தனா். பணம் தராததால், அவரை கத்தியால் தாக்கி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, சாந்தகுமாா் மற்றும் ரவிக்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இவா்களில், படாா் ரவி தொடா்ந்து பொதுமக்களின் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினத்தின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், படாா் ரவியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்தாா்.

ஏற்கெனவே, சாந்தகுமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.