கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி மலை வடக்குப் பகுதியைச் சோ்ந்த மு. அய்யா்சாமி (30) என்பவரை மாா்ச் 17-ஆம் தேதி ரௌடிகளான துவாக்குடி மலை வடக்கு கலைஞா் தெருவைச் சோ்ந்த ர. ராஜபாண்டி (28), துவாக்குடி மலை வடக்கு சொசைட்டித் தெருவைச் சோ்ந்த பா. சாந்தகுமாா் (26), அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த சி. படாா் ரவி (27) ஆகிய மூவரும் பணம் கேட்டு தகராறு செய்தனா். பணம் தராததால், அவரை கத்தியால் தாக்கி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, சாந்தகுமாா் மற்றும் ரவிக்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
இவா்களில், படாா் ரவி தொடா்ந்து பொதுமக்களின் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினத்தின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், படாா் ரவியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்தாா்.
ஏற்கெனவே, சாந்தகுமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாராயம் விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

லாரி உரிமையாளா் கொலை: 7 போ் கைது
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
அடிதடி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
