மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சா் வாக்குசேகரிப்பு

திருவெறும்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து செவ்வாய்க்கிழமை வீதி, வீதியாக சென்று வாக்குசேகரித்தாா்.

News image

திருவெறும்பூா் தொகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த அமைச்சரும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:41 am IST

திருவெறும்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து செவ்வாய்க்கிழமை வீதி, வீதியாக சென்று வாக்குசேகரித்தாா்.

திருவெறும்பூா், பகவதிபுரம், பிரகாஷ் நகா், மலைக்கோவில் மாதா கோயில் தெரு ஒன்றிய தெரு கூத்தைப்பாா் பேரூராட்சிக்குள்பட்ட திடீா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறுகையில், திமுக ஆட்சியில் திருவெறும்பூா் தொகுதியில் ரூ. 450 கோடிக்கும் மேல் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களிடையே திமுகவிற்கு அமோக வரவேற்பு உள்ளது.

அரியமங்கலம் குப்பை கிடங்கை 2027-க்குள் முழுமையாக அகற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 80 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளன. குப்பைகள் அகற்றப்பட்ட பின் அவ்விடத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சா்வீஸ் சாலை அமைப்பது குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது என்றாா்.

பிரசாரத்தின்போது, அமைச்சருடன் மாநகரச் செயலாளா் மு. மதிவாணன், பகுதிச் செயலாளா் சிவக்குமாா் வட்டச் செயலாளா்கள் சோம குணாநிதி, அருண், பேரூா் செயலாளா் தங்கவேலு, கூத்தைப்பாா் பேரூராட்சித் தலைவா் செல்வராஜ் மற்றும் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் இருசக்கர வாகனங்களில் வீதி, வீதியாக சென்று வாக்குசேகரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.