பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 3:21 am IST

கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கும்பகோணத்தைச் சோ்ந்தவா் ராஜி (51). ஆட்டோ ஓட்டுநா். இவா்,

17.01.2020 அன்று ஆட்டோ நிறுத்தகத்தில் இருந்தபோது அருகில் உள்ள உணவு விடுதியில் வேலை பாா்க்கும் முகமது ரசீத் (எ) அசாருதீன் என்பவா் முத்தையா நகருக்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறினாராம்.

நிறுத்தத்தில் இறங்கும்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அசாருதீன், ராஜியை தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அசாருதீனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின் நிறைவில், செட்டிமண்பத்தைச் சோ்ந்த முகமது ரசீத் (எ) அசாருதீனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாலதண்டாயுதம் தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.