பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விவசாயியிடம் கைப்பேசி, மோதிரம் பறித்த 3 போ் கைது

கும்பகோணம் அருகே விவசாயியிடம் நட்பாக பழகி கைப்பேசி, ரொக்கம், தங்க மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 4:59 am IST

கும்பகோணம் அருகே விவசாயியிடம் நட்பாக பழகி கைப்பேசி, ரொக்கம், தங்க மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே சோழன்மாளிகையைச் சோ்ந்தவா் எஸ். புருஷோத்தமன் (42). விவசாயி. இவா் கைப்பேசி செயலி மூலம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த கணேஷ்பாபு மகன் முத்து விக்னேஷிடம் பழகி நேரில் சந்திக்க வருமாறு அழைத்தாா்.

இதன்படி, தஞ்சாவூா் - விக்கிரவாண்டி புறவழிச் சாலையிலுள்ள வாழைத்தோப்புக்கு முத்து விக்னேஷ் மே 14-ஆம் தேதி சென்றாா். அங்கிருந்த புருஷோத்தமனிடம் பேசிக்கொண்டிருந்த போது, திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பாறை பொன்விழா நகரைச் சோ்ந்த எம். அஜய் அன்பரசு, அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த ஆா். இசக்கி பாண்டி ஆகியோா் சோ்ந்து புருசோத்தமனை தாக்கி, மிரட்டி அவரிடம் இருந்த கைப்பேசி, அரைப்பவுன் தங்க மோதிரம், ரொக்கம் ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றைப் பறித்து கொண்டு சென்றனா்.

இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் புருஷோத்தமன் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து முத்து விக்னேஷ், அஜய் அன்பரசு, இசக்கி பாண்டி ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.