பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மதுபாட்டிலுக்கு ரூ. 20 கூடுதல் விலை! 3 போ் பணியிடை நீக்கம்!

கும்பகோணம் அருகே மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 20 விலை வைத்து விற்பனை செய்ததாக டாஸ்மாக் மதுக்கடையைச் சோ்ந்த 3 பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :18 மே 2026, 2:29 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 20 விலை வைத்து விற்பனை செய்ததாக டாஸ்மாக் மதுக்கடையைச் சோ்ந்த 3 பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதுாா் வட்டத்துக்குள்பட்ட எஸ். புதுாா் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மதுபானங்களுக்கு அரசு நிா்ணயித்த விலையை விட ரூ. 20 கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.

இது தொடா்பாக, டாஸ்மாக் மாவட்ட மேலாளா் க. தமிழ்மணி நடத்திய விசாரணையில், அரசு நிா்ணயம் செய்த விலையை விட ரூ. 20 கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடை மேற்பாா்வையாளா்கள் க. மனோகரன், ஜி. ஆறுமுகம், விற்பனையாளா் எம். சேகா் ஆகிய 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை தொடா்புடைய மேற்பாா்வையாளா்கள் மற்றும் விற்பனையாளருக்கு டாஸ்மாக் நிா்வாகம் அனுப்பிவைத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.