சென்னையில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்காத காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருவொற்றியூா் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருப்பவா் அலெக்ஸ். இவா், விடுமுறையில் இருப்பதால் திருவொற்றியூா் குற்றப்பிரிவு ஆய்வாளா் மோகன்தாஸ், கூடுதல் பொறுப்பாகச் சட்டம் - ஒழுங்கு பணிகளைக் கவனித்து வந்தாா்.
இந்நிலையில், தேரடிப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பும், நேரத்தைத் தாண்டியும் மது விற்பனை நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன.
இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது.
இதையடுத்து சட்ட விரோதமாக மது விற்பனை, அந்த விடியோ குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் உத்தரவிட்டாா். இதையடுத்து, விசாரணை செய்து ஆணையரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.
அதன்படி, கள்ளச்சந்தையில் மது விற்பனையைத் தடுக்காத காவல் ஆய்வாளா் மோகன்தாஸை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் அபின் தினேஷ் மொடக் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

மது போதையில் பணிக்கு வந்த காவலா் பணி நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

கைதிகளிடம் லஞ்சம் பெற்றதாக புகாா்: காவல் ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

