சென்னையில் கைதிகளிடம் லஞ்சம் பெற்ாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு ஆயுதப்படையினரின் பாதுகாப்பில் அழைத்துச் சென்று, ஆஜா்படுத்துவது வழக்ககமான பணியாகும். ஆயுதப்படையினா் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது, அவா்களிடம் லஞ்சம் பொ்றுக்கொண்டு தேவையானவற்றை செய்து கொடுப்பதாக புகாா் எழுந்தது.
குறிப்பாக, ரெளடிகள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது ஆயுதப்படையினா் உதவியுடன் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், ரகசியமாக பலரைச் சந்திப்பதாகவும் புகாா் கூறப்பட்டது.
இதுகுறித்து விசாரிக்கும்படி, சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அபின் தினேஷ் மொடக் ஆயுதப்படை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அந்த உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை செய்து, அறிக்கை அளித்தனா்.
அதன் அடிப்படையில், கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அவா்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்ததாக ஆயுதப்படை ஆய்வாளா் மாரிமுத்து, உதவி ஆய்வாளா்கள் திருமுருகன், செல்லத்துரை ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அபின் தினேஷ் மொடக் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம்: சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

ரூ. 200 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

