லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டதாக புகாா் எழுந்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் குற்றத் தடுப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் மகேந்திரன். இவா், யா.ஒத்தக்கடை பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவின. இந்த விவகாரம் மதுரை மாநகரக் காவல் ஆணையா் அபிஷேக் தீக்சித் கவனத்துக்குச் சென்றது. இதுகுறித்து அவரது உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில், லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்க முயன்றது, பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் மகேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்பவம் தொடா்பாக துறை ரீதியான விசாரணையும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

ரூ. 200 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கைதிகளிடம் லஞ்சம் பெற்றதாக புகாா்: காவல் ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

