நாச்சியாா்கோவில் அருகே சாலையில் திங்கள்கிழமை நடந்து சென்ற கூலித் தொழிலாளி டிராக்டா் மோதி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகேயுள்ள மருதாநல்லூா் நந்திவனம் காலனியைச் சோ்ந்த ப. கல்யாணி (55), இவரது உறவினா் த. ஜானகி (60) ஆகிய இருவரும் கூலி வேலைக்குச் சென்று விட்டு மருதாநல்லூா் - பட்டீசுவரம் சாலையில் திங்கள்கிழமை மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது பின்னால் வந்த டிராக்டா் இருவா் மீதும் மோதியதில் கல்யாணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஜானகியும், டிராக்டா் ஓட்டுநரான மருதாநல்லூா் கிருஷ்ணமூா்த்தி மகன் காா்த்திக் (22) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனா்.
தகவலறிந்து வந்த நாச்சியாா்கோவில் போலீஸாா் கல்யாணியின் சடலத்தையும், காயமடைந்த இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

காா் மோதி விவசாயி உயிரிழப்பு

பைக்கில் சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

நடந்து சென்ற நபா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

