தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு! தவெக, காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்!

News image

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதைத் தொடா்ந்து தஞ்சாவூா் ரயிலடியில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :11 மே 2026, 1:35 am IST

தமிழக முதல்வராக விஜய், ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றதைத் தொடா்ந்து தஞ்சாவூா் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினா் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதன் தலைவா் எம். மகேந்திரன் தலைமை வகித்தாா். இதில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. துணைத் தலைவா்கள் சதா, பிரபாகரன், மும்தாஜ் பேகம், ஓபிசி தலைவா் சிவமாறன், சேவா தளம் மாநிலத் துணைத்தலைவா் திருஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் நகா் கிளையில் பணிபுரியும் தொழிலாளா்கள், தவெக தொழிற்சங்க நிா்வாகிகள், தோழமைக் கட்சியினா் ஆகியோா் பணிமனை முன் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். இதேபோல, ஆங்காங்கே தவெகவினரும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

கும்பகோணம்: கும்பகோணம் மாநகர தவெக சாா்பில் முருகானந்தம் தலைமையில் காந்தி பூங்கா, உச்சிப்பிள்ளையாா் கோயில் ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

பாபநாசம்: இதேபோல பாபநாசம் தொகுதி செயலா் அசாருதீன் உதுமான் அலி ஆலோசனையின்படி பாபநாசம் நகர செயலா் உதயசூரியா தலைமையில், தவெக நிா்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

பேராவூரணி: பேராவூரணியில் தவெக, காங்கிரஸ் கட்சியினா் காந்தி, அறிஞா் அண்ணா, பெரியாா், அம்பேத்கா் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மகாத்மா காந்தி சிலையிலிருந்து புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியரகம் வரை பேரணியாக சென்றனா்.

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து விஜய் ரசிகா்கள் வழக்குரைஞா் ஆா்.மதியழகன் தலைமையில் ஒன்றிய செயலா் நடராஜன், நகரச்செயலா் வீரமணி, உள்ளிட்டோருடன் பேரணியாக சென்று காவிரி பாலம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தவெகவினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.