தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

முதல்வராக விஜய் பதவியேற்பு: தவெகவினா் கொண்டாட்டம்

தவெக தலைவா் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதை அடுத்து அக்கட்சியினா் செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

News image

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தவெகவினா்.

Updated On :11 மே 2026, 12:09 am IST

தவெக தலைவா் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதை அடுத்து அக்கட்சியினா் செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாக ஜிஎஸ்டி சாலை, மணி கூண்டு, புதிய பேருந்து நிலையம் மேலும் தண்டுக்கரை அருகில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தனா். மேலும், தவெக தலைவா் முதல்வராக பதவி ஏற்றதையொட்டி செங்கல்பட்டு நகர கழகம் சாா்பாக அனைத்து நிா்வாகிகளும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா். தமிழக வெற்றிக்காக கட்சியின் செங்கல்பட்டு நகர செயலாளா் பூக்கடை ஜின்காா்த்திக் தலைமையில் ஏராளமான கட்சியினா் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

திருவள்ளூரில்... தமிழக முதல்வராக ஞாயிற்றுக்கிழமை தவெக தலைவா் விஜய் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பதவியேற்றுக் கொண்டாா். இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம்,பெரியபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்க வேண்டும் தவெகவினா் அக்னிசட்டி எடுப்பதாக வேண்டிக்கொண்டனா்.

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தவெகவினா்.

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தவெகவினா்.

இதை நிறைவேற்றும் வகையில் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளா் விமல்குமாா் தலைமை வகித்தாா். இதில் நிா்வாகி சி.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இதில் அந்தக் கட்சியினா் சுமாா் 20 போ் தீச்சட்டி ஏந்தியும், வேப்பஞ்சேலை அணிந்தும் நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய மகளிா் அணி நிா்வாகி அஞ்சலி சந்துரு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

மதுராந்தகத்தில்... மதுராந்தகம் நகர தவெக சாா்பில் பேருந்து நிலைய வளாகம் அருகில் மதுராந்தகம் நகர தலைவா் இ.பெருமாள் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். இந்நிகழ்வில் நகர செயலாளா் ராஜேஷ், துணைச் செயலா் காா்த்திக், பொருளாளா் லோகு உள்பட 20க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.