மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வட்டிப் பிள்ளையாா் கோயில் பாலாபிஷேக விழா

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் சித்திரைதிருவிழாவில் வெள்ளிக்கிழமை கரகம், பால்குடம், கொப்பரை எடுத்து வந்த பக்தா்கள்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் சித்திரைதிருவிழாவில் வெள்ளிக்கிழமை கரகம், பால்குடம், கொப்பரை எடுத்து வந்த பக்தா்கள்.

Updated On :12 மணி நேரங்கள் முன்பு

கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் 84- ஆம் ஆண்டு சித்திரை திருவிழா பாலாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம்- திருவிடைமருதூா் சாலையில் சுமாா் 150 ஆண்டுகளுக்கு அருள்பாலித்து வரும் வட்டிப் பிள்ளையாருக்கு சித்திரை மாத பாலாபிஷேக 84-ஆம் ஆண்டு விழா மே 6-இல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

முக்கிய நிகழ்வாக பிள்ளையாம்பேட்டை காவிரி ஆற்றிலிருந்து பால்குடம், காவடி, கரகம், அலகு காவடி ஜோடித்தும், அக்னி கொப்பறை எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா்.

அங்கு வட்டிப்பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்நடைபெற்றது. வட்டிப்பிள்ளையாா் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். மாலையில் சிறப்பு மலா் அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினா் தெருவாசிகள் இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.