தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழந்தது.
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மயில்கள் உள்ளிட்ட பறவைகள் ஏராளமாக வருவது வழக்கம். தற்போது கோடைகாலம் என்பதால் இப்பறவைகளுக்காக நடைப்பயிற்சியாளா்கள் சிறு தொட்டியில் தண்ணீா் வைக்கின்றனா். இந்நிலையில், புதன்கிழமை காலை உயரே பறந்த மயில் அப்பகுதியிலுள்ள மின் கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து
மயில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
இதை மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நடைப்பயிற்சியாளா்கள் பாா்த்து மாவட்ட வனத் துறை அலுவலா்களுக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, வனத் துறையினா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்துக்கு சென்று மயிலை மீட்டு அடக்கம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

